| Desc: லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்கிறது இந்நூல். புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டிய போர்ஹே கவிதை , தத்துவம், விஞ்ஞானம், கணிதம், மெய்த்தேடல், மிகை கற்பனை என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிய படைப்பாளி. நூற்றாண்டுகளாக மனித மனம் கடந்து வந்த புதிர்களும் அடைந்த எழுச்சியும் சந்தோஷமும் அற்புதமும் இவரது படைப்பின் வழியே மீள் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளன. இந்திய மனதோடு மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள போர்ஹே கீழ்திசை நாடுகளின் புனைவிலக்கியத்தின் மீது உலகின் கவனத்தைத் திருப்பியவர். இந்நூல் போர்ஹேயின் வாழ்வையும் புனைவையும் தமிழ் வாசகனுக்கு மிக எளிய முறையில் விவரிக்கின்றது. |