| Desc: ‘தேவரிஷிகளுள் நான் நாரதர் ஆவேன்’ என்று பகவான் கீதையில் மொழிந்துள்ளார். நாரதர் இல்லாத நற்கதை ஒன்று நம் நாட்டிலே இல்லை என்றே கூறலாம். பாரதக் கண்டத்தில் பரம்பரையாக வந்துள்ள புராண இதிகாச இலக்கியங்களில் பெரும்பாலும் நாரதரே நடுநாயகமாக அமைந்து சோபிக்கின்றார்.
நாரதருடைய லீலைகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறது இந்நூல். இக்கதைகள், மனிதன் தன் பகைவர்களான பொறாமை, கோபம், கர்வம், காமம் என்பனவற்றை விலக்கி, அறநெறிகளை பயின்று மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. |